Wednesday, 9 December 2015

EUDCATED SLAVES......

படித்த அடிமைகள் ........

இது மழைக்காலம்.... ஆங்காங்கே பள்ளிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வந்தவண்ணம்
உள்ளன !

அந்தந்த மாவட்ட ஆட்சியர் அந்தந்த மாவட்டத்தின் மழை நிலவரத்திற்கேற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கிறார் .

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொலைகாட்சியை பார்த்து அன்று பள்ளி உள்ளதா என்று தெரிந்து கொள்கின்றனர்.

ஆனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இது பொருந்தாது.....

மாவட்ட ஆட்சியரே அன்று விடுமுறை அறிவித்திருந்தாலும் இந்த தனியார் பள்ளி நிர்வாகம் தனியாக தன்னுடைய பள்ளிக்கு மட்டும் வகுப்புகள் நடத்துகின்றன.....


அதிலும் 10, +2 உள்ள பள்ளிகள் கலெக்டர்  விடுமுறை அளித்திருந்தாலும் உங்களுக்கு கண்டிப்பாக விடுமுறை கிடையாது என்று பகிரங்கமாக மாணவர்களுக்கு அறிவித்துள்ளன.

அப்படியே  கட்டயமாக மாணவர்களுக்கு விடுமுறை  என்ற சூழ்நிலை வந்தாலும் ஆசிரியர்கள்  கட்டயாமாக பள்ளிக்கு வந்தாகவேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

அப்படி வர தவறினால் அன்று LOSS  OF PAY  என்று  பகிரங்கமாக  அறிவிக்கின்றன. ஆசிரியர்களும் வேறு வழி இல்லாமல் பள்ளிக்கு வருகின்றனர்.  அப்படி வரும் ஆசிரியாயகளுக்கு வேலை கொடுத்தாக வேண்டுமே....! அதற்காக புது புது யுக்திகளை கையாள்கின்றன இந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள்!
அவைகளில் சில........

1.    CLASSROOM WORKSHOP  - CLASS ல்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நண்பர் வந்து ஆசிரியர்களுக்கு சொல்லி கொடுப்பார்
2.     POWER POINT PRESENTATION - ஒரு தலைப்பு கொடுக்கப்படும் அதற்கு PPT ரெடி செய்து CLASS எடுக்க வேண்டும்.
3.     MARK CLASS  - ஒவ்வொரு ஆசிரியர்க்கும் 5 நிமிடம் கொடுக்கப்படும் அதில் அவர் நடத்தும் ஒரு பாடபகுதியில் இருந்து ஏதாவது ஒரு TOPIC எடுக்க வேண்டும்

இப்படி இன்னும் பல பல........



Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails